காக்கை வளர்ப்பு

அந்தக் காகம் எப்போதிருந்து சிநேகமானது என்று சரியாக நினைவில்லை. எனக்கு மிகவும் பிடித்தவர்களாக இருந்து, இறந்துபோன என் தாத்தா அல்லது மாமனார் இருவரில் ஒருவராக அது இருக்கலாம் என்று என்றோ ஒருநாள் தோன்றியது. மறு பிறவியில் நம்பிக்கையில்லாதவன்தான். ஆனாலும் சமயத்தில் இப்படியும் தோன்றுவது, என்னைக் கேட்டுக்கொண்டல்ல. சமையல் அறையை ஒட்டிய சிறு பால்கனியின் கைப்பிடிச் சுவரில் வந்து உட்காரும். எனக்குப் புரியாத மொழியில் ஒருசில வரிகள் பேசும். பசிக்கறதா என்று கேட்பேன். ஒருவேளை தாகமெடுக்கிறதோ என்றும் நினைப்பேன். … Continue reading காக்கை வளர்ப்பு